×

புதுப்பெண் எலி பேஸ்ட் தின்று சாவு

 

வெள்ளகோவில், ஜூன் 16: வெள்ளகோவில் அருகே உள்ள ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த சுரேஷ்க்கும் (32), கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த மணிமேகலை (22) என்பவருக்கும் 2 மாதங்களுக்கு முன்பு காங்கயம் வட்டமலை அருகே உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் கடந்த மாதம் 8ம் தேதி அன்று மணிமேகலை வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், அதனால் வீட்டில் இருந்த எலிக்கு வைக்கும் பேஸ்ட்டை சாப்பிட்டு விட்டு, 3 நாட்களுக்குப் பிறகு தனது கணவர் சுரேஷிடம் கூறியதாகவும், உடனே கோவையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மணிமேகலையை அழைத்துச் சென்று சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்று மணிமேகலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து காங்கயம் டிஎஜ்பி பார்த்திபன், வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post புதுப்பெண் எலி பேஸ்ட் தின்று சாவு appeared first on Dinakaran.

Tags : Vellakovil ,Suresh ,Ramalingapuram ,Manimekalai ,Kodaikanal ,
× RELATED மாணவி கூட்டு பலாத்காரம் அதிமுக நிர்வாகிக்கு குண்டாஸ்